ரஷ்யாவில் ஆறு பிராந்தியங்களை இலக்காக கொண்டு உக்ரைன் இன்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல் கடந்த 18 மாதங்களில் ரஷ்யா மீதான மிகப் பெரிய தாக்குதல் என ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷியாவின் மேற்கு பிராந்தியமான பிஸ்கோவில் உள்ள விமான நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில் நான்கு Il-78 ரக போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்தன. இந்த விமான நிலையத்தில் வரும், செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ரியாஜான், கலுகா, ஓர்யோல், பிரயான்ஸ்க் மற்றும் மாஸ்கோ பகுதிகளில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.