தேசிய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை

September 5, 2023

கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 2.24 கோடி ஊக்கத்தொகைகளை முதலமைச்சர் வழங்கினார். ஜனவரி 30 முதல் பிப்ரவரி 11 வரை மத்திய பிரதேசத்தில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வென்றவர்களுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதன்படி 64வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டி, 12வது தேசிய வில்வத்தை சாம்பியன்ஷிப் போட்டி, தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்ற வீரனைகளுக்கு […]

கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 2.24 கோடி ஊக்கத்தொகைகளை முதலமைச்சர் வழங்கினார்.

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 11 வரை மத்திய பிரதேசத்தில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வென்றவர்களுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதன்படி 64வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டி, 12வது தேசிய வில்வத்தை சாம்பியன்ஷிப் போட்டி, தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்ற வீரனைகளுக்கு ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரூபாய் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்குவதன் அடையாளமாக 10 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு காசோலைகளை மு க ஸ்டாலின் வழங்கினார். இது 2023 ஆம் ஆண்டு சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற எம். பிரனேஷ், 2019 ஆம் ஆண்டுக்கான பெண்கள் சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் என்ற ரக்ஷிதா ரவி என மொத்தம் 134 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu