நாளை முதல், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், தேசிய பங்குச் சந்தை நடவடிக்கைகளில் இருந்து வெளியேறுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம், தனது நிதி சேவைகளை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் என்ற பெயரில் பிரித்து, பங்குச் சந்தையில் பட்டியலிட்டது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி, தேசிய பங்குச் சந்தையில் ஜியோ பைனான்சியல் நிறுவனம் பட்டியலிடப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில், குறிப்பிட்ட விலைப் பிரிவை ஜியோ பைனான்சியல் எட்டவில்லை. எனவே, தேசிய பங்குச் சந்தையில் இருந்து ஜியோ பைனான்சியல் வெளியேற்றப்படுகிறது. ஜியோ பைனான்சியல் நிறுவனம், மும்பை பங்கு சந்தையில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், காப்பீட்டு துறையில் கால் பதிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.