டெல்லியில் 9,10 ஆம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல நாடு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பின் 18 வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர், கனடா பிரதமர், ஜப்பான் பிரதமர், ஜெர்மனி அதிபர், பிரான்ஸ் அதிபர், சவுதி அரேபியா இளவரசர், தென்னாபிரிக்க அதிபர், தென்கொரியா அதிபர், ஆஸ்திரேலியா பிரதமர், அல்பானிஸ் மற்றும் துருக்கி அதிபர் ஆகிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் பல்வேறு காரணங்களால் ரஷ்ய அதிபர், சீனா அதிபர், மெக்சிகோ அதிபர் வர மாட்டார்கள் என அந்நாடுகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தாலி, இந்தோனேஷியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்கிறார்களா என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.