டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி-20 மாநாடு நிறைவடைந்துள்ளது.
டெல்லியில் ஒன்பது மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்றது.இதில் பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இதன் அடுத்த மாநாடு டி20 பிரேசில் நடத்த இருக்கிறது. இதற்கு தலைமையை பிரதமர் மோடி பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்துள்ளார். ஜி 20 நாடுகளின் தலைமையை பிரேசில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஏற்கிறது. அதனைத் தொடர்ந்து ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காணொளி வாயிலாக நவம்பர் மாதம் இந்தியா சார்பில் ஜி20 மாநாடு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.