பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 52 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் வடமேற்கே மஸ்டங் மாவட்டம் உள்ளது. இன்று மிலாது நபி பண்டிகை என்பதால் இங்குள்ள மதினா மசூதிக்கு அருகே இப்பண்டிகையை கொண்டாட மக்கள் திட்டமிட்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென குண்டு வெடித்தது.இதில் 52 பேர் கொல்லப்பட்டனர். 13 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இது ஒரு தற்கொலை படை தாக்குதல் என கூறப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவாஸ் கோரியும் பலியானார். கஸ்கோரியின் காருக்கு அருகே தாக்குதல் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.