வருகின்ற ஜனவரி மாதம் தெலுங்கானா,மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபையில் பதவி காலம் முடிவடைகிறது. இதனை அடுத்து சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டது. இதனை அடுத்து தேர்தலுக்காக அட்டவணை இந்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அட்டவணையை அக்டோபர் 7ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா