உக்ரைனில் உள்ள காக்கிவின் கிழக்கு பகுதியில் உணவு விடுதி மற்றும் மளிகை கடை ஆகியவற்றின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 49 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி கூறுகையில், சாதாரண மளிகை கடை மீது ரஷ்யா ராக்கெட் மூலம் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த குற்றச்செயல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாத செயலாகும் என்றார். மேலும் இது குறித்து கார்கிவ் பகுதியின் தலைவர் ஓலக் கூறுகையில், இன்று ஒரு கடை மற்றும் உணவு விடுதி மீது ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது. இங்கு போருக்கு முந்தைய மக்கள் தொகை சுமார் 500 பேர் இருந்ததாக கூறினார்.