ஆந்திராவில் ஜியோ மைசூர் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தங்க சுரங்கங்களை அமைத்து வருகிறது.ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் டெக்கான் கவர்மெண்ட் என்ற பெயரில் ஜியோ மைசூர் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தங்க சுரங்கங்களை அமைத்து வருகிறது. இந்தச் சுரங்கங்கள் இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் ஆகும். அடுத்த ஆண்டு இந்த தங்க சுரங்கங்கள் உற்பத்தியை தொடங்கும் என ஜியோ மைசூர் சர்வீஸ் இந்தியா லிமிடெட் நிறுவன இயக்குனர் ஹனுமா பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த சுரங்கங்கள் மூலம் மூன்று மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவை ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்ய உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தங்க சுரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூபாய் 200 கோடியே முதலீடு செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.