இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை துவங்கியது.
என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் செல்கிறார்.
டெல்லியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தில் வேலைக்காக சென்று மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள 90 இந்தியர்களில், 32 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.