செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் - விஞ்ஞானிகள் ஆச்சரியம்

October 20, 2023

செவ்வாய் கிரகத்தில், விண்கற்கள் மோதுவதால் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். ஆனால், அண்மையில் செவ்வாய் கிரகத்தின் உள்ளேயே, தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய் கிரக ஆய்வுக்காக இன்சைட் லேண்டரை நாசா அனுப்பியுள்ளது. இந்த லேண்டர், செவ்வாய் கிரகத்தில் 4.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை பதிவு செய்துள்ளது. பூமியை பொறுத்தவரை இது மிகச்சிறிய அளவிலான நிலநடுக்கம் என்றாலும், செவ்வாய் கிரகத்தின் சூழலுக்கு இது மிகப்பெரிய நடுக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக, […]

செவ்வாய் கிரகத்தில், விண்கற்கள் மோதுவதால் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். ஆனால், அண்மையில் செவ்வாய் கிரகத்தின் உள்ளேயே, தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இன்சைட் லேண்டரை நாசா அனுப்பியுள்ளது. இந்த லேண்டர், செவ்வாய் கிரகத்தில் 4.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை பதிவு செய்துள்ளது. பூமியை பொறுத்தவரை இது மிகச்சிறிய அளவிலான நிலநடுக்கம் என்றாலும், செவ்வாய் கிரகத்தின் சூழலுக்கு இது மிகப்பெரிய நடுக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக, இது வெளியில் இருந்து வந்த விண்கல் மூலமாக ஏற்படும் நிலநடுக்கம் அல்ல என்பதை லேண்டர் கண்டறிந்துள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் சொந்த நிலத்தட்டுகளால் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில், இந்த நிலநடுக்கம் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu