ஐஸ்லாந்தில் பெண்களின் ஊதிய உயர்வு போராட்டத்திற்கு அந்த நாட்டின் பெண் பிரதமர் கேத்தரின் ஜேக்கப் ஸ்டேட்டர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐஸ்லாந்து வட ஐரோப்பிய தனித்தீவு நாடாகும். இங்கு சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு ஆண்கள் பெறும் ஊதியத்தை விட பெண்கள் 21% குறைவாக பெறுகின்றனர். தூய்மை பணிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகளில் பெண்களுக்கு இன்னும் ஊதியம் குறைவாகவே உள்ளது. கடந்த 1975 முதலே இது குறித்து ஏழு முறை பெண்கள் போராட்டங்கள் நடத்தினர். இருந்தும், அரசாங்கம் இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் உள்ள பெண்கள் அமைப்பினர் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இந்நாட்டின் தலைநகரில் உள்ள அர்னார் ஹால் மற்றும் பல முக்கிய நகரங்களில் சுமார் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் வேண்டும் என்று கூறினர். இந்த போராட்டத்தின் காரணமாக பள்ளிக்கூடங்கள், வங்கிகள், கடைகள் போன்றவை செயல்படாமல் போயின. இந்த போராட்டத்திற்கு அந்த நாட்டின் பெண் பிரதமர் கேத்தரின் ஜேக்கப் ஸ்டேட்டர் ஆதரவு தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவரும் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.