ஒரு கைக்கடிகாரத்தைப் போல, மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் வகையில், புதிய வகை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கைபேசிகள் துறையில் முன்னணி நிறுவனமான மோட்டோரோலா இந்த வகை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மடக்கு கைபேசிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மோட்டோரோலாவின் வளையும் கைப்பேசிகள் அறிமுகமாகியுள்ளன. இந்த வகை கைபேசிகள், ஓ எல் இ டி தொடுதிரையுடன், பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கைப்பேசிகளின் பின்பாகம், வளையும் தன்மையுடன் கூடிய பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை எந்தவித தொந்தரவும் இன்றி நீண்ட நேரத்திற்கு கைகளில் அணிந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.