கோவையில் உள்ள வ.உ.சி நினைவு உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்நிலையில் இதன் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட உள்ளன.
இதில் பத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊர்வன பிராணிகள் ஏராளமான பாலூட்டி விலங்குகள் மற்றும் பாம்பு வகைகள் ஆகியவை உள்ளன. இவை வனப்பகுதியில் விடப்பட உள்ளன. சில சேலத்தில் உள்ள உயிரியல் பூங்காவிற்கும், சில விலங்குகள் வேலூரில் உள்ள அமிர்த சரஸ் பூங்காவிற்கும் அனுப்பப்பட உள்ளன. இவை 45 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீர் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ரயில் மூலம் கொண்டுவர ஒப்புதல் கிடைத்துள்ளது.