அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக, இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையில் இது நேர்ந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டுகளில் நுழைந்த சட்டவிரோத நபர்களின் எண்ணிக்கையை விட இரட்டிப்பு மடங்காகும். ஏற்கனவே, அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோத இந்தியர்களின் வழிகாட்டுதலில், மேலும் பல இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது, முறையாக விசா நடைமுறைகளை பின்பற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது. அதே சமயத்தில், உலகளாவிய அளவில் அதிகரித்து காணப்படும் புலம்பெயர்வு, இந்த சட்டவிரோத நுழைவுகளின் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.