1200 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய பழங்கால கப்பலை கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் பானைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கடலின் அடிப் பகுதியில் சென்ற இருவர், ஒரு மரத்துண்டு ஒட்டி இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி அதிகாரிகள் கடலுக்கு அடியில் சென்று பார்த்தபோது, 25 மீட்டர் நீளம் கொண்ட வால்நெட் மரங்களால் செய்யப்பட்ட கப்பலை கண்டுபிடித்துள்ளனர். அந்த கப்பலுக்குள் பழங்கால பானைகளும், சில கலைப் பொருட்களும் கிடைத்துள்ளன. அந்த கப்பலை ஆய்வு செய்ததில் அக்கப்பல்
கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரியவந்தது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர்கள் தனது எல்லையை விரிவுபடுத்திய போது கொதிகலனை ஏற்றி சென்ற கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாகவோ அல்லது அனுபவமில்லாத மாலுமியாலோ கப்பல் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கலைப்பொருட்கள் இன்னும் பாதுகாப்பாக எப்படி இருக்கிறது என்ற குழப்பத்திற்கு , இஸ்ரேல் கடல் மற்ற இடங்களைக் காட்டிலும் ஆழம் அதிகம் என்றும் அதனால் அடிப்பகுதியில் உள்ள கடல் மணல் கலைப்பொருட்களைப் பாதுகாப்பாக வைத்தி௫ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.