மனிதர்களின் வயதை குறைக்கும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில், மனிதர்களின் மரபணுவில் மாற்றம் செய்து, உயிரியல் ரீதியாக மனிதர்களின் வயதை குறைக்கும் ஆராய்ச்சி முக்கியமானது. இந்த ஆராய்ச்சி தற்போது எலிகளின் மீது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 70% வெற்றி கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மனிதர்களின் மரபணுவில் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில், உயிரியல் ரீதியாக, உடல் உறுப்புகளின் வயது குறையும். அதன்படி, மனிதர்களின் வயது இயற்கையாகவே குறையும். முதற்கட்டமாக, எலிகள் மீது இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். இந்த ஆராய்ச்சியில், பன்றிகளில் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மற்றும் நானோ துகள் ஆகியவை, வயதான எலிகளின் மீது செலுத்தப்பட்டன. அப்போது, இ 5 எனப்படும் வயதை குறைக்கும் பரிசோதனை 70% வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், எலியின் மரபணுவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, அதன் இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளின் வயது குறைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முழுமையாக வெற்றி அடையும் பட்சத்தில், வயது முதிர்ந்த மனிதர்கள் மீண்டும் இளைஞர்களாக மாற முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.