இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் சுமார் 4600 கோடி மதிப்பிலான ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையத்தை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
பெரும் வணிக கப்பல் தடத்தில் உள்ள கொழும்பு துறைமுகத்தை உலக தரத்தில் உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா பன்னாட்டு வளர்ச்சியை நிதி நிறுவனம் கூறியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த முனையத்திற்கான கடனை அமெரிக்க பன்னாட்டு வளர்ச்சி நிதி நிறுவனம் வழங்கும். அந்த அமைப்பின் 51% சதவீத பங்குகள் அதானி குடும்பத்திடம் உள்ளது. மேலும், இலங்கையின் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் 34 சதவீத பங்குகளையும் இலங்கை துறைமுக ஆணையம் மீதியுள்ள பதினைந்து சதவீத பங்குகளையும் வைத்திருக்கின்றன.