இண்டிகோ நிறுவனம், வரும் 2026 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏர் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.இண்டிகோ நிறுவனம், முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஏர் டாக்ஸி சேவையை தொடங்க உள்ளது. இதற்காக, ஆர்ச்சர் ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கக் கூடிய விமானங்களை இந்த நிறுவனம் வழங்க உள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இந்த திட்டம் செயல்படும் பட்சத்தில், தில்லியில் இருந்து குருகிராமுக்கு வெறும் 7 நிமிடங்களில் செல்ல முடியும். இதுவே, சாலை மார்க்கமாக செல்லும் பட்சத்தில், குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.