தனது பங்குகளை திரும்ப பெற்று, சுமார் 1600 கோடி கடனை ஓயோ நிறுவனம் திருப்பி செலுத்த உள்ளது.
ஓயோ நிறுவனத்தின் TLB கடன் நிலுவையில் உள்ளது. இதிலிருந்து 30% பங்குகளை ஓயோ நிறுவனம் திரும்ப பெற உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதி கொண்டு, சுமார் 1620 கோடி ரூபாய் கடன் முன்கூட்டியே திருப்பிச் செலுத்தப்படுகிறது. வரும் ஜூன் 2026 இல் முதிர்வு அடையும் இந்த கடன், முன்கூட்டியே திருப்பிச் செலுத்தப்படுகிறது. ஓயோ நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இந்த நடவடிக்கையில் நிறுவனம் களமிறங்கியுள்ளது. நவம்பர் 14 முதல் 18 ஆம் தேதி வரை ஓயோ பங்குகள் பொது வெளியீட்டில் வெளி வருகின்றன.