தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ரேவந்த் ரெட்டி முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி மைதானத்தில் இன்று புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர்
ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். இவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்.