தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளை ஊக்குவிக்க, இந்திய அரசு தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்களாக தங்க பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் டிசம்பர் 18 முதல் 22 வரையிலும், பிப்ரவரி மாதத்தில் பிப்ரவரி 12 முதல் 16 வரையிலும், தங்கப் பத்திர வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. தங்க பத்திரங்கள் மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தங்க பத்திரங்களின் விநியோகம், பிப்ரவரி 21, 2024 ல் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.