அல்-அஜீஸியா ஊழல் வழக்கில் நவாஸ் விடுவிப்பு

December 13, 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அல் அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை ஊழல் வழக்கிலிருந்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று விடுவித்தது. கடந்த மாதம் அவன் பீல்ட் ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பனாமா ஆவண முறைகேடு விவகாரம் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதன் பின் அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018ல் 10 […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அல் அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை ஊழல் வழக்கிலிருந்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று விடுவித்தது. கடந்த மாதம் அவன் பீல்ட் ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பனாமா ஆவண முறைகேடு விவகாரம் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதன் பின் அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018ல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்திருந்தது. பின்னர் அவர் சிகிச்சைக்காக 2019 லண்டன் சென்றார். அவர் அங்கேயே தங்கிவிட்டார். அதனால் அவரை தப்பி ஓடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், கடந்த அக்டோபரில் அவர் பாகிஸ்தான் திரும்பினார். சிறை தண்டனைக்கு காரணமாக இருந்த இரு ஊழல் வழக்குகளில் இருந்தும் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu