சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இப்பணி 15 கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக மூன்றாவது கட்டப்பணிகளில் திருத்தம் செய்து வருகின்றன. இதில் மாநகரத்தின் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதலில் 1189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பான பணிகளை தொடங்கியது. தற்போது இது 5904 சதுர கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதேபோல ஜாதி பெயருடன் கூடிய தெருக்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.