மத்திய பிரதேசம் மாநிலத்தில் திறந்தவெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரி ஆக மோகன் யாதவ் நேற்று பதவியேற்ற நிலையில், திறந்தவெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் உணவுத்துறை, போலீஸ், உள்ளூர் நகர்ப்புற அமைப்புகள் ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும் இது டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். போபாலில் உள்ள நேரு மைதானத்தில்
ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மோகன் யாதவ் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
தனது முதல் கேபினட் கூட்டத்திலேயே இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் மத்திய பிரதேசம் வழியாக அழைத்து செல்லும் ராமர் பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.