சீனாவில் இருந்து இலங்கைக்கு மீண்டும் ஒரு உளவு கப்பல் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சீன உளவு கப்பல் இலங்கை கடல் பகுதியில் ஆய்வுப் பணிகள் என்ற அடிப்படையில் அடிக்கடி வந்து செல்கின்றன. இதற்கு இந்தியா அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில்நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இது இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்பட்டு வந்தாலும் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு முன்னதாக சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு உளவு கப்பல் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பல எதிர்ப்புகளை தாண்டியும் இந்த கப்பல் தனது ஆய்வு பணியை முடித்து கடந்த இரண்டாம் தேதி சிங்கப்பூர் சென்றடைந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு உளவு கப்பல் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.