மாலத்தீவு இந்தியாவுடன் ஆன நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உள்ளது.
மாலத்தீவில் சமீபத்தில் முகமது முயிசு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றார். இவர் சீன ஆதரவாளராக கருதப்பட்டு வருகிறார். இவர் பதவியேற்ற உடனேயே இந்திய படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் இந்தியாவுடன் ஆன நீரியல் துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து மாலத்தீவு வெளியேறியது. இந்த ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மாலத்தீவு சென்றபோது கையெழுத்தானது. இந்திய கடற்படை மாலத்தீவில் விரிவான ஹைட்ரோகிராபிக் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது இந்திய அதிகாரிகளிடம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக மாலத்தீவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.