காசாவில் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் சுமார் 1000 பேரை பிடித்து வைத்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சுமார் ஆயிரம் பேரை ராணுவம் பிடித்து வைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கைகளை தூக்குபவர்களை நாங்கள் கைது செய்வோம். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என ராணுவம் கூறியுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. எல்லை பகுதியில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய வகை வாகனம் உள்ளே செல்லும் வகையில் மிகப்பெரியதாக அது உள்ளது. பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இது கட்டப்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதில் அனைத்து வகை வசதிகளும் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.