சீனா, அந்நிய நாட்டு தொழில்நுட்பங்களை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அதன் பயன்பாடுகளை குறைக்க அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள், ஐபோன் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த 8 மாகாணங்களில், அலுவலகப் பணியாளர்கள் ஐபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசாங்க ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சீன மக்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, அண்மையில் வெளியிடப்பட்ட ஹூவாய் நிறுவனத்தின் மேட் 60 ப்ரோ கைபேசிகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஐபோன் தடை விதிக்கப்பட்டுள்ளது.