கடந்த 2022 ஆம் ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி, அண்மையில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. தற்போது, இந்த தக்காளியின் புகைப்படங்களை, நாசா யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தக்காளி பயிரிடப்பட்டிருந்தது. இந்த தக்காளியை அறுவடை செய்யும் பணியின் போது, விண்வெளி வீரர் பிராங்க் ரூபியோ தவறுதலாக தக்காளி ஒன்றை தொலைத்து விட்டார். அண்மையில் கண்டெடுக்கப்பட்ட இந்த தக்காளி, சுருங்கிப் போன நிலையில், நீர் வற்றி காணப்பட்டுள்ளது. அத்துடன், அதன் நிறம் மங்கலாகி உள்ளது. ஆனால், அதில் எந்தவித நுண்ணுயிரிகள் அல்லது பூஞ்சைகள் வளரவில்லை. இதனை உறுதி செய்த நாசா, தக்காளி புகைப்படத்தை வெளியிட்டு, விண்வெளியில் பயிர்களை விளைவிக்கும் ஆராய்ச்சி முன்னேறி வருவதாக கூறியுள்ளது.