கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் ஹசன் கான் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை படைத்து வருகிறார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஷேக் ஹசன் கான் மாநில அரசில் பணியாற்றி வருகிறார். இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களான எவரெஸ்ட், தெனாலி, கிளிமஞ்சரோ, எல்ப்ரஸ் ஆகிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். அதற்காக பல கடும் சவால்களைக் கடந்து இந்திய கொடியை வின்சென்ட் சிகரத்தில் ஏறி பறக்க வைத்து சாதனை படைத்துள்ளார். உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய கொடியை பறக்க விட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.