அண்மையில், சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பூகம்பம் ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே அதன் அறிகுறிகளை அறிந்ததாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த சவாலான அறிவியலில் சீன விஞ்ஞானிகள் தேர்ந்தவர்களாக அறியப்படுகிறார்கள். ரிக்டர் அளவுகோலில் 7 க்கு மேலான பூகம்பங்களை அவர்களால் ஊகிக்க முடியும் என கூறப்படுகிறது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, புவி ஈர்ப்பு புலத்தில் அமைந்துள்ள அதிர்வெண்களில் சீரற்ற மாற்றத்தை கவனித்ததாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றத்தால் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட போவதாக ஊகித்துள்ளனர். ஆனால், எந்த பகுதியில் பூகம்பம் ஏற்படும் என்பதை அறிய முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.