இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள், நல்லிணக்கணம், மீன்பிடி சட்டங்கள் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதோடு இந்தியாவில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.