எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

December 23, 2023

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 7500 நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் முகத்துவார பகுதியில் 5.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது இதில் காட்டுக்குப்பம், சிவன் படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக்குப்பம், தாள குப்பம், தெட்டுக்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் […]

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 7500 நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் முகத்துவார பகுதியில் 5.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது இதில் காட்டுக்குப்பம், சிவன் படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக்குப்பம், தாள குப்பம், தெட்டுக்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாத நிலையில் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்து 2301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூபாய் 12,500 வீதமும், எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வீதமும் மூன்று கோடி ரூபாய் அரசினால் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு எண் 6 மற்றும் 7 பகுதிகளில் பாதிக்கப்பட்ட 6700 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 7500 வீதம் மொத்தம் ஐந்து கோடியே இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu