பாரத ஸ்டேட் வங்கி, முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் இருந்து கடன் பத்திரங்களை வாங்கி உள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன.
முத்தூட் பின்கார்ப் நிறுவனம், 5 ஆண்டு கால முதிர்வுடைய கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இந்த பத்திரங்களின் மதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதே சமயத்தில், கடன் பத்திர வெளியீட்டு மூலம் திரட்டப்படும் நிதி, முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள், விரிவாக்கம், வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்ற முடியாத வகையில் இந்த கடன் பத்திரங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி, 200 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.














