தமிழர் போற்றும் தாவரங்கள்

"உலகம் ஒரு பல்லுயிர்க் களஞ்சியம்; மனிதர்களும் அதில் உறுப்பினர்கள் அவ்வளவே." என்பதே பழந்தமிழர் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஆகும். தமிழர்கள் தங்கள் வாழிடத்தில் உள்ள தாவரங்களின் குறிப்புகளை இலக்கியத்தின் ஊடாக அறிமுகப் படுத்தியுள்ளனர். சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. ஒரே மரத்திற்கு பல புலவர்கள் வேறு வேறு பெயர்கள் வழங்கியுள்ளார்கள். எனவே, அறிஞர்களின் ஆராய்ச்சிகளின் படி, இலக்கியங்கள் மூலமாக 150 தாவர வகைகள் அறியப்படுகின்றன. மேலும் புலவர்களின் இந்தக் குறிப்புகளை […]

"உலகம் ஒரு பல்லுயிர்க் களஞ்சியம்; மனிதர்களும் அதில் உறுப்பினர்கள் அவ்வளவே." என்பதே பழந்தமிழர் கொண்டிருந்த வாழ்க்கை முறை ஆகும். தமிழர்கள் தங்கள் வாழிடத்தில் உள்ள தாவரங்களின் குறிப்புகளை இலக்கியத்தின் ஊடாக அறிமுகப் படுத்தியுள்ளனர். சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. ஒரே மரத்திற்கு பல புலவர்கள் வேறு வேறு பெயர்கள் வழங்கியுள்ளார்கள். எனவே, அறிஞர்களின் ஆராய்ச்சிகளின் படி, இலக்கியங்கள் மூலமாக 150 தாவர வகைகள் அறியப்படுகின்றன. மேலும் புலவர்களின் இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பின்னாட்களில் கண்டறியப்பட்ட தாவரங்களும் உண்டு.

ஒவ்வொரு வாழிடத்திலும் ஒவ்வொரு வகை தாவரம் செழித்து வளர்ந்ததை, தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

குறிஞ்சித் திணையில் (மலையும் மலை சார்ந்த இடங்களிலும்) பலாமரம், சந்தன மரம், மா மரம், வேங்கை மரம், அகில் மரம், தேக்கு மரம், அசோக மரம், மூங்கில் ஆகியவை நிறைந்திருந்தன.

முல்லைத் திணையில் (காடும் காடு சார்ந்த இடங்களிலும்) கொன்றை மரம், காயா மரம், குருந்தம் மரம் ஆகியவை வளர்ந்திருந்தன.

மருதத் திணையில் (வயலும் வயல் சார்ந்த இடங்களிலும்), மாமரம், ஞாழல் மரம், நொச்சி மரம், மருத மரம், அத்தி மரம், காஞ்சி மரம், வஞ்சி மரம் போன்றவை அதிகளவில் காணப்பட்டன.

நெய்தற் திணையில் (கடலும் கடல் சார்ந்த இடங்களிலும்) புன்னை மரம், ஞாழல் மரம், கண்டல் மரம் ஆகியவை இருந்தன.

பாலைத் திணையில் (சுரமும் சுரம் சார்ந்த இடங்களிலும்) யா மரம், ஓமை மரம், கள்ளிச்செடி, கோங்கு மரம், ஞெமை, இருப்பை மரம், வேம்பு, உழிஞை, பாலை ஆகிய மரங்கள் செழித்திருந்தன.

இவையே இலக்கியங்கள் கூறும் வாழிட தாவரங்கள் ஆகும்.
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை இன்றைய விஞ்ஞானம் அறிந்து கொள்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே” என்று இயம்புகிறது.

‘‘புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உலிவே அக்கிளைப் பிறப்பே’’

என்ற தொல்காப்பியத்தின் வரிகள், உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். அவை புல், மரம், செடி, கொடி, தாவர இனங்கள் அனைத்தும் ஆகும் என்று விளக்குகிறது. தமிழிலக்கியத்தில் இருக்கக்கூடிய தாவர அறிவியல் உண்மைகள், தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் அல்லது இயற்கை மீதான முழுமையான அன்பு ஆகியவை பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அதன் முழுமைத்தன்மையைச் சிதைத்துவிடாமல் மிக நுணுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாகும்.

ஒவ்வொரு தாவரத்தின் தனி இயல்பு மற்றும் அதன் பயன்களைத் தமிழ் இலக்கியங்கள் வகுத்துக் கூறுகின்றன. இந்தப் பகுதியில் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி விட்ட தாவரங்களைப் பற்றிய விரிவான தகவல்களை அறியலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu