இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாடுக்கு ரகசிய தகவல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நான்கு பேருக்கு ஈரானில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாடுக்கு ரகசிய தகவல்கள் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு மேலும் 4 பேருக்கு ஈரானில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பாக இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 16ஆம் தேதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தங்களது நாடுகளை வேவு பார்ப்பதாக ஈரானும், இஸ்ரேலும் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.