மயிலாடுதுறை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசிதழில் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகள் நெற்களஞ்சியத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டமும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தப்படும். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில்,மணமேல்குடி, திருவரன் குளம் ஆகிய ஊர்களுக்கு அடுத்து மயிலாடுதுறை மாவட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அது என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.