இந்தியாவில் உள்ள நெஸ்லே தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை இல்லாததை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜெனிவாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நெஸ்லே நிறுவனத்திற்கு இந்தியாவில் மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 3,500 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். நெஸ்லே ஊழியர்கள் IUF என்ற பெயரில் சங்கம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர்களில் 1000 பேர் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை இல்லாததை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது குறித்து நெஸ்லே இந்தியா வெளியிட்ட அறிக்கையில் , தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், ஆனால் ஊழியர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் குறிப்பிட்ட நாட்களில் வேலை செய்ய வலியுறுத்தப்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் ௯றியுள்ளது. சில தொழிற்சாலைகளில் ஒரு நாள் உற்பத்தி இல்லாவிட்டாலும் கூட, எந்தவித வணிக பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி ௯றிய நெஸ்லே தொழிற்சங்கத் தலைவர் மங்குஷ் கோன்கர், கர்நாடகா மாநிலத்தில் உள்ள நெஸ்லேவின் நஞ்சன்கூடு ஆலை, கோவாவில் உள்ள பிச்சோலிம் தொழிற்சாலை மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தஹ்லிவால் ஆகியவற்றில் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ௯றினார். இந்தியாவில் மட்டும் 21.4 பில்லியன் டாலர் வ௫வாயை நிறுவனம் பெறுகிறது. இந்நிலையில் இந்த ஒ௫நாள் வேலை நிறுத்தத்தால் நூடுல்ஸ் மற்றும் சாஸ் தயாரிக்கும் பிச்சோலிம் ஆலையில் மட்டும் 215 டன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். இ௫ப்பினும் வரும் நாட்களில் நிலைமையை சரி செய்வோம் என்கிறார் கோன்கர்.