கடந்த ஞாயிற்றுக்கிழமை வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என ஐநா விமர்சித்துள்ளது ஐநாவுடன் இணைந்து அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளும் வங்கதேச தேர்தலை விமர்சித்துள்ளன.
வங்கதேசத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் வெறும் 41.8% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு முன் எதிர்கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது இது தவிர முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சுமார் 25000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் இதை வைத்து பார்க்கும் போது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதாக நம்ப முடியவில்லை இவ்வாறு ஐ நா சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதே போன்ற கருத்தை பகிர்ந்துள்ளது. இந்த நிலையில் வங்கதேச பிரதமராக 5வது முறையாக ஷேக் ஹசீனா பொறுப்பேற்க உள்ளார்.