அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட உறுதி.

October 3, 2022

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் 3 நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். பசிபிக் தீவு நாடுகளில் தனது உறவுகளை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு அடித்தளமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தைவான் ஜலசந்தி உட்பட ஆசியா […]

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் 3 நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.

பசிபிக் தீவு நாடுகளில் தனது உறவுகளை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு அடித்தளமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தைவான் ஜலசந்தி உட்பட ஆசியா முழுவதும் எந்த பிரச்னையாக இருந்தாலும் அமெரிக்கா அச்சம் இல்லாமல் செயல்படும் என்று தெரிவித்தார். இப்பகுதியில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க அமெரிக்கா தூதரக ரீதியில் தாக்குதலை நடத்தி வருகிறது. அதன்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை ௯ட்டத்தை நடத்தியது.
இந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி லாயிட் ஆஸ்டின், தைவான் பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாக ௯றினார். பின்னர் சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டன.

இதற்கிடையில் கடந்த வாரம் பசிபிக் தீவு நாடுகளுக்கு 810 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu