காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.
காசாவில் இனப்படுகொலையில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு பதிந்தது. அதன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என்று இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் மால்கம்சா என்பவர் வாதாடினார்.
தென்னாப்பிரிக்கா சார்பில் பாலஸ்தீனர்களிடையே கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்துவதாகவும், அந்த பகுதி மக்களை பஞ்சத்தில் சிக்க வைப்பதாகவும் இஸ்ரேலின் தாக்குதல் உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை இந்த தாக்குதலில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.