மெட்டா நிறுவனத்தின் ரகசிய பணிநீக்க நடவடிக்கையால் 12,000 பேஸ்புக் பணியாளர்கள் வேலையை இழக்கக்கூடும்

October 6, 2022

அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதன் தலைவர் மார்க் சக்கர்பர்க் ஆகியோர் பங்கு பெற்ற வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஒவ்வொரு குழுவும் 15% பணியாளர்களை "Needs Support" என்று பதிவு செய்யும்படி கூறப்பட்டது. அதாவது, செயல்திறன் அடிப்படையில் குறைவான திறன் உடைய பணியாளர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு அடையாளம் காணப்படுவர். இதனால், பேஸ்புக் தனது 15% பணியாளர்களை அல்லது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த வாரத்தில் […]

அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதன் தலைவர் மார்க் சக்கர்பர்க் ஆகியோர் பங்கு பெற்ற வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஒவ்வொரு குழுவும் 15% பணியாளர்களை "Needs Support" என்று பதிவு செய்யும்படி கூறப்பட்டது. அதாவது, செயல்திறன் அடிப்படையில் குறைவான திறன் உடைய பணியாளர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு அடையாளம் காணப்படுவர். இதனால், பேஸ்புக் தனது 15% பணியாளர்களை அல்லது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

கடந்த வாரத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இது தொடர்பாக ப்ளைண்ட் என்ற செயலியில் பதிவிட்டிருந்தார். அதில் பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் ரகசிய பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். மேலும், "அதற்காகவே, பெர்ஃபார்மென்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் பிளான் எனப்படும் பிஐபி யில் 15% பணியாளர்களை அனுப்பும் திட்டத்தை மெட்டா நிறுவனம் செயல்படுத்துகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய பதிவிற்கு பின்னர் பல ஊழியர்கள் ப்ளைண்ட் செயலியில் கலந்துரையாடல் செய்தனர். அதில் ஒருவர், "நீட்ஸ் சப்போர்ட் என்று முத்திரை குத்தப்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். பெரும்பாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதில்லை" என்று தெரிவித்திருந்தார். மற்றொரு நபர், "இவ்வாறு முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். அதில் அவர்கள் நிறுவனத்திலேயே வேறொரு பணிக்கு மாற வேண்டும் அல்லது நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறப்படுவார்கள்" என பதிவிட்டிருந்தார்.

மெட்டா நிறுவனம், கடந்த வாரத்தில் ஆள் சேர்க்கையை நிறுத்தி உள்ளதாக அறிவித்திருந்தது. அத்துடன், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி மாற்றங்களும் நேரும் என தெரிவித்திருந்தது. பேஸ்புக் மட்டுமல்லாது ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களும் புதிதாக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதை நிறுத்தியுள்ளன. அத்துடன், பிங்க் ஸ்லிப் வழங்கவும் திட்டமிட்டுள்ளன. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மார்க் சக்கர்பர்க், "உலகப் பொருளாதாரம் தற்போது சரிவிலிருந்து மீண்டு நிலையான தன்மைக்கு வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை அவ்வாறு நிலைத்தன்மை அடையவில்லை. அதன் காரணமாக நாங்கள் நிறுவனத்தின் நலனை கருதி, சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது" என்று கூறியிருந்தார். மேலும், கடந்த ஜூன் மாதத்தில், புது பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவதை 30% குறைக்க இருப்பதாக பேஸ்புக் கூறியிருந்தது. எனவே, இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, நிறுவனத்தில் ரகசிய பணி நீக்கம் நடைபெற வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu