கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கியமான ராணுவ தளபதி வளரி சலோனி, அதிபர் மாளிகைக்கு திங்கட்கிழமை அழைக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வரும் வாரங்களில் அவரது நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, நேற்று மாலை வரைக்கும் ராணுவ தளபதி வளரி சலோனி தனது பதவியில் நீடித்திருந்தார். அதனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை அவர் தொடர்ந்து பணி செய்வார் என கூறப்படுகிறது. அவரது பணி நீக்கம் குறித்த செய்திகள் போலியான வதந்தி என மற்றொரு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வேறு பதவி கொடுக்கப்பட போவதாகவும், அதன் பொருட்டு இந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.