பாகிஸ்தான் தோ்தலில் போட்டியிட குரேஷிக்கு 5 ஆண்டுகள் தடை

February 5, 2024

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹமது குரேஷி 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் ஷா மஹமத் குரேஷி. இவர் ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாக இம்ரான் கான் மற்றும் மகமது குரேஷுக்கு எதிராக […]

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹமது குரேஷி 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் ஷா மஹமத் குரேஷி. இவர் ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாக இம்ரான் கான் மற்றும் மகமது குரேஷுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. ரகசிய தகவல்களை கசிய விட்டதன் மூலம் ரகசிய காப்புறுதியை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிட குரேஷுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. முன்னதாக இம்ரான் கானுக்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu