குஜராத் மாநிலத்தில், கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில், மிகப்பெரிய தாமிர ஆலை ஒன்றை அதானி குழுமம் ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆலை, வரும் மார்ச் மாதம் முதல் செயல்பாடுகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், இந்தியாவின் தாமிர இறக்குமதி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த கட்டமைப்புகள் உயர்ந்து வருகின்றன. எனவே, இந்தியாவின் காப்பர் அல்லது தாமிரம் தேவை அதிகரித்துள்ளது. கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் காப்பர் பயன்பாடு 7.5 லட்சம் டன் அளவில் பதிவான நிலையில், 1.81 லட்சம் டன் காப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இது அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் உயரும். இந்த நிலையில், குஜராத் கட்ச் பகுதியில் அதானி குழுமத்தின் உற்பத்தி ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதன்படி, இந்தியாவில் பெரும்பான்மையான காப்பர் இறக்குமதி குறைய உள்ளது.