அபியாஸ் ஏவுகணை - ஒரே வாரத்தில் 4 முறை சோதனை

February 6, 2024

இந்தியா, அபியாஸ் என்ற வான்வழி தாக்குதல் ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இது அதிவிரைவு திறன் கொண்ட ஏவுகணை ஆகும். இந்த நிலையில், கடந்த ஒரே வாரத்தில் 4 முறை இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனை பகுதியில் ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் ஆய்வகம் அபியாஸ் ஏவுகணைக்கான பூஸ்டரை வடிவமைத்துள்ளது. அதனை பயன்படுத்தி, அபியாஸ் ஏவுகணையின் பாதுகாப்பான வெளியீடு, லாஞ்சர் அனுமதி உள்ளிட்ட 4 வெவ்வேறு பணி நோக்கங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. […]

இந்தியா, அபியாஸ் என்ற வான்வழி தாக்குதல் ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இது அதிவிரைவு திறன் கொண்ட ஏவுகணை ஆகும். இந்த நிலையில், கடந்த ஒரே வாரத்தில் 4 முறை இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனை பகுதியில் ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் ஆய்வகம் அபியாஸ் ஏவுகணைக்கான பூஸ்டரை வடிவமைத்துள்ளது. அதனை பயன்படுத்தி, அபியாஸ் ஏவுகணையின் பாதுகாப்பான வெளியீடு, லாஞ்சர் அனுமதி உள்ளிட்ட 4 வெவ்வேறு பணி நோக்கங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதற்காகவே ஒரே வாரத்தில் 4 முறை சோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணை சோதனைகளின் போது, ஏவுகணையின் வேகம், வரம்பு, உயரம் போன்ற பல்வேறு அளவீடுகள் சரிபார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியோடு, அபியாஸ் ஏவுகணை உற்பத்தி விரைவில் தொடங்கப்படும். மேலும், இந்த ஏவுகணை இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏவுகணை சோதனை வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu