நாசா பேஸ் என்ற விண்வெளி திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இதற்கான ஏவுதல் பிப்ரவரி 5ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக, பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை மதியம் 12:00 மணி அளவில் ஏவுதல் நிகழும் என கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, Plankton, Aerosol, Cloud, ocean Ecosystem (PACE) என்ற விண்வெளி திட்டத்தில் நாசா ஈடுபட்டுள்ளது. அதன்படி, விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள், சூரியனின் இருப்பிடத்துடன் ஒத்திசைவோடு நிலைநிறுத்தப்பட உள்ளது. அதனால், ஒவ்வொரு நாளும் சூரியன் பூமத்திய கோட்டை கடக்கும் அதே சமயத்தில், செயற்கைக்கோள் தனது சுற்றுப் பாதையை நிறைவு செய்யும். மேலும், கடல் பகுதியின் புகைப்படங்களை எடுக்கும் போது, சூரியன் செயற்கை கோளுக்கு பின்புறமாக இருப்பதால், இந்த செயற்கைக்கோள் எடுக்கும் புகைப்படங்கள் அதிக விவரங்களைக் கொண்டிருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.