கத்தாரில் இருந்து மேலும் 20 ஆண்டுகளுக்கு திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் என்ற அளவில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதற்காக சுமார் 6.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நடப்பு ஒப்பந்தத்தை விட தற்போதைய ஒப்பந்தம் குறைந்த விலையில் கையொப்பம் ஆகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு 49 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்று கூறப்பட்டுள்ளது. கோவாவில் இந்திய எரிசக்தி வாரம் நிகழ்ச்சியை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
இது தொடர்பாக இந்தியாவின் முக்கிய எல்என்ஜி இறக்குமதி நிறுவனம் பெட்ரோலட் எல் என் ஜி லிமிடெட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உரம், மின்சாரம் மற்றும் சிஎன்ஜி உற்பத்திக்காக கத்தாரிலிருந்து எல் என் ஜி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தம் கத்தார் எனர்ஜி நிறுவனத்துடன் கையொப்பம் ஆகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.