உக்ரைனுக்கு சுமார் 79,000 கோடி நிதி அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் நேற்று உக்ரைனுக்கு மேலும் 953 கோடி டாலர் மதிப்பிலான நிதி உதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக செனட் சபையில் மசோதா கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 29 வாக்குகளும் பதிவாகின. முன்னதாக விவாதத்தின் போது உக்ரைனுக்கு மேலும் நிதி உதவி வழங்க சில குடியரசு கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்காவுக்கு பல நிதி நெருக்கடிகள் இருப்பதால் வெளிநாடுகளுக்கு நிதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அவர்களுடைய வாதமாக இருந்தது. எனினும் உக்ரைனுக்கு உதவாமல் போனால் அது ரஷ்ய அதிபர் புதினுக்கு துணிச்சலை அளிக்கும் என்பதாலும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மற்றொரு தரப்பு எம்பிக்கள் வாதம் செய்தனர்.
இத்தகைய எதிர்ப்பு காரணமாக உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி அளிப்பதில் கடந்த சில காலமாக சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள மசோதாவால் உக்ரைனுக்கு சாதக சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.